Rock Fort Times
Online News

கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மறுப்பு ! விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குமுறல்!

திருச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார். இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசும் போது, வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் கேட்டு விண்ணப்பித்தால் வேறு வங்கிகளில் கடன் இல்லை என்ற சான்றிதழ் வாங்கி வருமாறு அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள். மேலும்,திருவறும்பூர் சின்ன சூரியூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை அதிகாரிகள் துணையோடு பட்டா போட்டு விற்பனை செய்கிறார்கள் என கூறினார். இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் சங்கத்தின் துணை துணைத் தலைவர் மேகராஜன், சம்சுதீன், சிவ சூரியன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்