Rock Fort Times
Online News

சீமான் மீது தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்துள்ள திருச்சி சரக டிஐஜி வருண்குமார் போலீசார் புடைசூழ நீதிமன்றத்திற்கு வருவதா?- நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் புகார்…!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார், தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தனிப்பட்ட முறையில் திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக வருகை தரும் வருண்குமார், தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நூறுக்கும் மேற்பட்ட காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகிறார். மேலும், அந்த காவலர்கள் வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றத்திற்கு வருகை தருபவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டி திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் அலெக்ஸ் மற்றும் கென்னடி ஆகியோர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்