விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று(04-01-2025) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 அறைகள் தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர். வெடிவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வேதிப்பொருட்கள் கலவையின்போது விபத்து நேர்ந்தது என்றும், விசாரணைக்கு பிறகே முழு தகவலும் தெரியவரும் என்று தெரிவித்தனர்.
Comments are closed.