திருச்சி, தில்லை நகரில் கீழே சாய்ந்து விழும் அபாய நிலையில் டிரான்ஸ்பார்மர்: நடவடிக்கை எடுக்குமா மின் வாரியம்?( வீடியோ இணைப்பு)
திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளுள் ஒன்று தில்லைநகர். இப்பகுதியில் மருத்துவ மனைகள், பள்ளிகள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், காலை முதல் இரவு வரை தில்லை நகர் பகுதி பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் தில்லைநகர் முதல் கிராசில், திலக் மருத்துவமனை அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் ஒன்று மிகவும் பழுதடைந்து அபாயகரமான நிலையில் நிற்கிறது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், இந்த டிரான்ஸ்பார்மர் மூலம்தான் மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மர் மிகவும் பழுதடைந்து உள்ளதுடன் அதனை தாங்கி நிற்கும் மின் கம்பங்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. கம்பத்தின் அடிப்பகுதியும் உறுதியற்ற நிலையிலேயே உள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இந்த டிரான்ஸ்பார்மர் கீழே சரிந்து விழக்கூடும். இதன் வழியாக அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். ஆகவே, ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்பு இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.