Rock Fort Times
Online News

ராகுல் காந்திக்கு ஆதரவாக திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்

ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பல்வேறு இடங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் ஆர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்

மோடியை விமர்சித்ததாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் விதித்ததை கண்டித்தும், அவரை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஜன சதாப்தி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாந்த் தலைமையில் ரயில் மறியல் நடந்தன இதில் 25க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்