தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், அமுதா ஐஏஎஸ், அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கு முதன்மை செயலாளர் பதவியிலிருந்து கூடுதல் தலைமை செயலாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இவர்களில் அதுல் ஆனந்த், அமுதா ஐஏஎஸ், காகர்லா உஷா, அபூர்வா
ஆகியோர் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். சுதீப் ஜெயினை பொறுத்தவரை தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் அவர்
மத்திய அரசில் பணிபுரிந்து வருகிறார். 5 பேருக்கும் கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் இதற்கான ஆணையை வழங்கினார்.

Comments are closed.