திருச்சி, எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது30). இவர் வீட்டில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில், எ.புதூர் போலீசார் சம்பவ இடம் சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.