Rock Fort Times
Online News

திருச்சியில் ரூ.1லட்சத்துடன் வெளியே சென்ற பெண் கடத்தப்பட்டாரா?- போலீசார் விசாரணை…!

திருச்சி மேல சிந்தாமணி அக்ரஹாரம் மாதுளம் கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பானு (40). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஒரு லட்சம் பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ,பான் கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் கண்ணன் கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து பானுவை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்