ஸ்ரீரங்கம் வ.உ.சி. பேரவையின் சார்பாக, அந்த சமுதாயத்தை சோ்ந்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா,நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சங்கர்பிள்ளை தலைமையில் வீரேஸ்வரத்தில் நடைபெற்றது.
விழாவில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க தலைவர் மருத்துவர் செந்தில்பிள்ளை , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் முடிவில் முருகன் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.