திருச்சி, தேவதானம் ரயில்வேகேட் அருகே டாஸ்மாக் பார் உள்ளது. சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு 10 மணிக்கு மேல் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். அடுத்த நாள் மதியம் பாரை திறக்க வந்தபோது அதன் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ஸ்மார்ட் டிவி, யூபிஎஸ் மற்றும் சில பொருட்கள் திருட்டுப் போயிருந்தன. இதுகுறித்து கோட்டை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.