தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதில், விண்ணப்பித்த சில பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை. இந்நிலையில் மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மகளிர் உரிமை தொகை கிடைக்கப் பெறாதோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், ஜூன், 4ல் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.
Comments are closed.