14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!
அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், பணி நிரந்தரம், நிரந்தர காலமுறை ஊதியம், பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று(28-04-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுகமதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயசந்திரராஜா, சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கரன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பிச்சைபிள்ளை, மாவட்ட செயலாளர் பொன்னர், மாவட்ட இணைச் செயலாளர் ஜி.பாபு, அமைப்பு செயலாளர்கள் பாண்டியன், அண்ணாதுரை, சாலை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பரமசிவம் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். முதலில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Comments are closed.