Rock Fort Times
Online News

திருச்சி, வயலூர் ரோடு குமரன் நகரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்- தட்டு தடுமாறி செல்லும் வாகன ஓட்டிகள்…(வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை ளிக்கப்பட்டுள்ளது.மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்தவகையில் திருச்சி மாநகரம், வயலூர் ரோடு குமரன் நகரில் உள்ள பேங்கர்ஸ் காலனி பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அவசர தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வெளியே செல்பவர்கள் தட்டு தடுமாறி தான் சென்று வருகின்றனர். ஆகவே, இந்தப் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திருச்சி மாநகர பகுதிகளில் இன்று(14-12-2024) மழை இல்லை. இதனால் மாநகர மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்