Rock Fort Times
Online News

திருச்சியில் அரிசி மண்டி உரிமையாளருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது…!

திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த வடமலை-சீதாலட்சுமி தம்பதியின் மகன் விக்னேஷ்வரன் ( வயது 21). இவர் குடித்து விட்டு தனது தாயாருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அத்துடன் தனது மோட்டார் சைக்கிளை ரூ.3 ஆயிரத்துக்கு விற்று விட்டாராம். இதுபற்றி கேட்ட சீதாலட்சுமியை அவர் தாக்கியுள்ளார். இதுகுறித்து பஞ்சகூடதெருவில் அரிசி மண்டி நடத்தி வரும் எடத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜிடம் சென்று சீதாலட்சுமி முறையிட்டுள்ளார். அவர், இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அதன்பேரில், சீதாலட்சுமி போலீசில் புகார் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த விக்னேஷ்வரன், நேற்று இரவு கோவிந்தராஜின் கடைக்கு சென்று அவரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் விக்னேஷ்வரனை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்