திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வீர் பிரதாப் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக நே.பொன்மணி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று(11.09.2026) திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள், அலுவலர்கள், மற்றும் ஊழியர்கள் வாழ்த்து கூறினர். அதனைத் தொடர்ந்து புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் கூறுகையில், திருச்சி மாநகர மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

Comments are closed.