Rock Fort Times
Online News

திருச்சி சிறை கைதி திடீர் மரணம்…!

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 77). ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், கோர்ட் உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 19-ம் தேதி அவருக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டது. உடனடியாக, சிறை அதிகாரிகள் அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமச்சந்திரன் இறந்தார்.
இதுகுறித்து , சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்