திருச்சி திருவானைகோவில் பகுதியை சேர்ந்தவர் எத்திராஜ்(64). இவர் தொ.மு.சவில் மாநில பேரவை செயலாளராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாநகர சைபர் க்ரைம் பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கோல்டன் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் இருந்து எனது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு செய்தி வந்தது. அதில்,தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி நாட்டை விட்டு வெளியேர வேண்டும். உங்களுக்கு என்ன தேவையோ அவற்றை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என்று கூறியதாகவும், முதல்வர் வெளிநாடு செல்ல உள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி மூலம் கேலோ விளையாட்டு போட்டிக்கு பிரதமரை அழைப்பது போல் நேரில் சென்று தாங்கள் வெளியேறுவது தொடர்பாக பேசிவிட்டு வர சென்றதாகவும், பிரதமர் அனுமதி அளித்த நிலையில், முதல்வர் வெளிநாடு செல்ல திட்டமிட்டதாகவும் மேலும் பல அவதூறான தகவல்களை அந்த சேனல் மூலம் பரப்பியுள்ளனர். எனவே சம்மந்தபட்ட யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த சேனல் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த மனுவில் கூறியுள்ளார். அதனடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, முதல்வர் குறித்து
அவதூறு பரப்பிய நபர் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed, but trackbacks and pingbacks are open.