தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஏற்கனவே
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், 5 மாவட்டங்களிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு பலத்தை சேதம் ஏற்பட்டது. தற்போது அங்கு நிலைமை சீரடைந்து வருகிறது. ஆனால், தற்போது தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகளுக்காக திருச்சி மாநகராட்சியில் இருந்து 260 தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என 300க்கு மேற்பட்டோர் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவா்களை திருச்சி மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன் வழி அனுப்பிவைத்தாா். மேலும், தூய்மை பணிக்காக கனரக வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 973
Comments are closed, but trackbacks and pingbacks are open.