நண்பர்களை காப்பாற்ற முயன்ற போது துயரம்: திருச்சி மாவட்டம், காணக்கிளியநல்லூர் அருகே ஏரியில் மூழ்கிய வாலிபர் சடலமாக மீட்பு…!
திருச்சி மாவட்டம், லால்குடி, காணக்கிளியநல்லூர் அருகே உள்ள சிறு வயலூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவசக்தி( வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கியதை பார்த்த சிவசக்தி அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், நண்பர்கள் உயிர் தப்பிய நிலையில் திடீரென சுழலில் சிக்கிய சிவசக்தி நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் சிவசக்தியை மீட்க முயன்றனர். இருப்பினும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் இன்று(14-12-2024) இரண்டாவது நாளாக தேடும் பணி தொடர்ந்தது. அப்போது வசக்தி உடலை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.