Rock Fort Times
Online News

திருச்சியில் பரிதாபம்: புளியம்பழம் எடுக்க முயன்றபோது ஆஸ்பெஸ்டாஸ் உடைந்து கீழே விழுந்த சிறுவன் பலி…!

திருச்சி இ.பி.ரோடு பூலோகநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். திருச்சி மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜெயவேல் (வயது 15). இவர் பூலோகநாதர் சுவாமி கோவில் எதிரில் உள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டியின் முதல் தளத்தில் மாநகராட்சி வார்டு அலுவலகத்தின் வராண்டாவிற்காக போடப்பட்டுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் மீது ஏறி அதன்மேல் விழுந்து கிடக்கும் புளியம்பழத்தை எடுப்பதற்கு முயன்றுள்ளார். அப்போது அந்த ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்து விழுந்தது. இதில் கீழே விழுந்து மயங்கி கிடந்த சிறுவன் ஜெயவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஜெயவேலை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்