Rock Fort Times
Online News

தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர்- அரசியல் தலைவர்கள் கண்டனம்…!

தமிழக  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  திருவள்ளுவர் திருநாள் விழா” என்ற பெயரில் ஆளுநர் மாளிகை அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது. நாளை(24-05-2024) மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.  திருவள்ளுவர் படத்தை மீண்டும் காவி நிறத்தில் வெளியிட்டுள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  கடந்த ஜனவரி மாதம் இதேபோல திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்