Rock Fort Times
Online News

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகே ஊர்ந்து சென்ற பாம்பால் பரபரப்பு…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பழனி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(35). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் தரையில் படுத்து பாலகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று 6 மாத குழந்தையின் அருகில் ஊர்ந்து சென்றுள்ளது. இதை சட்டென்று கவனித்த பாலகிருஷ்ணனின் மனைவி சுதாரித்து எழுந்து பாம்பு…பாம்பு…என்று அலறியுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு எழுந்த பாலகிருஷ்ணன் குழந்தைகளை அரவணைத்துக் கொண்டு அந்த பாம்பை தேடி உள்ளார்.

 

ஆனால், அந்தப் பாம்பு வீட்டின் ஒரு பகுதிக்குள் புகுந்து பதுங்கிக் கொண்டது. இதுகுறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அலுவலர் பிரபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். பாம்பு பிடிபடும் வரை பிரமிப்புடன் நின்று கொண்டிருந்த கணவன், மனைவி இருவரும் பாம்பு பிடிபட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்