Rock Fort Times
Online News

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று காலை 6 மணிக்கு . மேளதாளங்கள் முழங்க கோவில் நிர்வாகம் சார்பில் முக்கிய பிரமுகர்கள், அர்ச்சகர்கள் பூத்தட்டுகளை ஏந்தி நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக வந்து பூக்களால் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

 

தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வரும் பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு விஷேச அபிஷேகம் நடந்தன.இன்று இரவு பக்தர்கள் சங்கத்தின் சார்பில் பூக்களை ரதத்தில் எடுத்துச் சென்று அம்மனுக்கு பூஜை செய்யும் வைபவமும் நடக்கிறது. இதேபோல, பல்வேறு அமைப்பினரும் பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்