Rock Fort Times
Online News

திருச்சியில் விபரீதமாக முடிந்த ஊஞ்சல் விளையாட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

திருச்சியில் பள்ளி சிறுவன் துண்டால் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்தில் இறுக்கியதில் மூச்சுத்திணறி உயிரிழப்பு. கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் அதியரூபன்(11). மொராய்ஸ் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துண்டால் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக துண்டு கழுத்தில் இறுக்கி அதியரூபன் இறந்தார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்