Rock Fort Times
Online News

திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு- 3 வாலிபர்கள் கைது…!

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் என்கிற கோழி விஜய் (வயது 25 ). இவர் அப்பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்து, காட்டிக் கொடுத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் விஜய்க்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் தென்னூர் அண்ட கொண்டான் பகுதியில் கோழி விஜய் நின்று கொண்டிருந்தபோது அப்பகுதி இளைஞர்கள் தென்னூரை சேர்ந்த தினேஷ்குமார், ஜீவா நகரை சேர்ந்த ஹரிசக்கரவர்த்தி, வாமடத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கும், விஜய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .இதில் அந்த மூன்று வாலிபர்களும் விஜய்யை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யபிரியா வழக்குப்பதிந்து தினேஷ்குமார், ஹரிசக்கரவர்த்தி, மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். காயமடைந்த கோழி விஜய் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்