Rock Fort Times
Online News

திருச்சியில் டாஸ்மாக் மதுக்கடையில் இரு தரப்பினர் மோதல் – ரவுடிக்கு கத்திக்குத்து…!

திருச்சி, பாலக்கரை முதலியார்சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் (வயது 26 ). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ரவுடி பட்டியலில் உள்ளார். பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற ரூபன் ( வயது 35 ). இவர்கள் இருவரும் முதலியார் சத்திரம் காஜா பேட்டை பகுதியில் உள்ள மதுக்கடையில் தனித்தனியாக மது அருந்தி உள்ளனர். மது அருந்திவிட்டு வெளியே வரும்போது மணிகண்டனுக்கும், ரூபனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரூபன், அவருடைய நண்பர் நெல்சன் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கையில் கத்தியால் குத்தினர். இதில் காயமடைந்த மணிகண்டன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் மணிகண்டனும், அவரது நண்பர் நிர்மலும் சேர்ந்து ரூபனையும், நெல்சனையும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் காயம் அடைந்தனர். அவர்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் பாலக்கரை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடையில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்