வேலை இல்லை என்கிற கவலையா? திருச்சியில் நாளை மறுநாள் (ஜூலை 17) நடக்குது மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்…!
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ஜூலை 17ம் தேதி நடைபெறுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீக் தயாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற
ஜூலை 17ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இவ் வேலைவாய்ப்பு முகாமில், பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் உள்ளிட்ட கல்வி தகுதி பெற்ற 18 வயது முதல் 40 வயது உடையோர் பங்கேற்று பயனடையலாம்.
முற்றிலும் இலவச வேலை வாய்ப்பு முகாமான இதில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால் 0431 – 2413510, 94990 55901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.