Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.61 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் உரிய அனுமதியின்றி வைத்திருந்த ரூ. 8 லட்சத்து 4 ஆயிரத்து 200 மதிப்பிலான 18,000 யு.ஏ.இ. திா்ஹாம்கள், 5,000 அமெரிக்க டாலர்கள், மற்றொரு பயணி வைத்திருந்த ரூ.5 லட்சத்து 57 ஆயிரத்து 500 மதிப்பிலான 25,000 யு.ஏ. இ. திா்ஹாம்கள் என மொத்தம் ரூ.13 லட்சத்து 61 ஆயிரத்து 700 மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்