சென்னை யானை கவுனி பகுதி வழியாக பைக்கில் ஹவாலா பணம் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
அந்த பணம் பற்றி கேட்டபோதும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.1.90 கோடி இருந்தது. மேலும், அது ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து படேல், அஸ்வின் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அந்தப் பணத்தை அவர்களிடம் கொடுத்து அனுப்பிப்பது யார்?, யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.