உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் பணிகளை விரைவாக முடித்து வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசியல் கட்சி நிர்வாகிகள், மற்றும் விஐபிகள், பக்தர்கள் அதிகளவு கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்
அயோத்தியில் சிறிய அளவில் இருந்த விமான நிலையம் தற்போது பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இண்டிகோவின் விமான சேவை டிசம்பர் 30ம் தேதி முதல் டெல்லியில் இருந்து அயோத்திக்கு செயல்பட தொடங்குகிறது. அதேபோல, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் டிசம்பர் 30ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை துவங்கும் என அறிவித்துள்ளது.
இந்த விழித்திடத்தில் தினசரி விமான சேவை ஜனவரி 16ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.