புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், ராணுவத்திற்கு வழங்கியது போல் ரயில்வே துறைக்கும் புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் தென்பகுதி ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் பொன்மலை ரயில்வே பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணிமனை கோட்டத் தலைவர் பால்ரெக்ஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.