Rock Fort Times
Online News

கபடி போட்டிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர் சாலை விபத்தில் பலி…!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் மகன் சசிகுமார்( வயது 17).12- ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சமயபுரம் நரசிங்கமங்கலத்தில் நடைபெறும் கபடி போட்டிக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் மாந்துறை பஸ் டெப்போ அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்