Rock Fort Times
Online News

பெட்ரோல் பங்க் ஊழியா் குளியறையில் சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம் முசிறி திருத்தியமலை வடக்கிபட்டி கோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். குளியல், கழிப்பறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் உடன் பணிபுாியும் ஊழியர்  ஒருவா் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சண்முகம் பேச்சு, மூச்சு இல்லாமல் தலையில் அடிபட்ட நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .இது குறித்து அவரது மகன் ராமராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்