அரியலூர் அருகே உள்ள விரகாலூர் பகுதியில் உள்ள வயல் பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ( 09.10.2023 ) காலை முதல் வழக்கமான பணி நடைபெற்றது. அதில் சுமார் 5 நபர்கள் வேலை செய்து வந்தனர். திடீரென அந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஒருவரின் உடல் மட்டும் சுமார் 200 அடி தூக்கி வீசப்பட்டு உடல் சிதைந்து காணப்பட்டது. 3 நபர்கள் தீ காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்து அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.