திருச்சி மாவட்டம், அதவத்தூர் மற்றும் அம்மாபேட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இவற்றிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு நாளை ( 10.10.2023 ) மின் விநியோகம் இருக்காது. திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், அதவத்தூர்சந்தை, முத்தூட்பிளாட், சுண்ணாம்புகாரன்பட்டி, பள்ளகாடு, கீரிக்கல்மேடு, ஒத்தகடை, இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிகுறிச்சி, வயலூர், பேரூர், கீழவயலூர், மேலப்பட்டி, குழுமணி, பெரியகருப்பூர், சோமரசம்பேட்டை, வாசன்நகர் விஸ்தரிப்பு வாசன்வேலி, அதவத்தூர், முல்லிகரும்பூர், வயலூர், சாய்ராம் குடியிருப்பு, செவகாடு, மல்லியம்பத்து, புங்கனூர் பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதேபோல, அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இதிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான, ராம்ஜீ நகர், கள்ளிக்குடி, சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம் குளத்தூர், வெள்ளிவாடி, அரியாவூர், நவலூர்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான் பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி பகுதிகளிலும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கா. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.