Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வந்த வட மாநில பக்தர் சுருண்டு விழுந்து பலி…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பகல்பத்து முடிந்து ராப்பத்து நிகழ்ச்சி நடந்து வருகிறது. சொர்க்கவாசல் வழியாக செல்ல தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அந்தவகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கோபி யாதவ் (வயது 62) என்ற பக்தர், மகன் முகேஷ் யாதவ் என்பருடன் வந்திருந்தார். இருவரும் மேலூர் ரோடு தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடம் அருகே வந்தபோது கோபி யாதவ் திடீரென சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த அவரது மகன் முகேஷ் யாதவ், தந்தையை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் கோபி யாதவ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்