இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா நகரில், திருடும் நோக்கில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டிற்குள் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அண்டை வீட்டார் இணைந்து சாதுரியமாகப் அந்தத் திருடர்களை மடக்கிப் பிடித்து, பிளாஸ்டிக் பேக்கிங் டேப் மூலம் கை, கால்களை அசைக்க முடியாதபடி மம்மி போல ஒட்டி சுருட்டி வைத்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலத்த சிரிப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருடர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தால் அவர்களுக்கு தர்ம அடி கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், சிக்கிய திருடர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுக்காமல், பேக்கிங் டேப்பைக் கொண்டு தலை முதல் கால் வரை மொத்தமாகச் சுற்றி தரையில் படுக்க வைத்ததுடன், போலீஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரை அவர்களை அசையக் கூட விடாமல் அப்படியே காவல் காத்துள்ளனர். திருடர்கள் நால்வரும் உடம்பைச் சுற்றிலும் டேப் ஒட்டப்பட்ட நிலையில் தரையில் மண்டியிட்டுப் பரிதாபமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களும், காணொளிகளும் இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வரும் வேளையில், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடாமல், வினோதமான முறையில் திருடர்களைக் கட்டிப்போட்ட அண்டை வீட்டாரின் இந்த நூதனச் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.