Rock Fort Times
Online News

திருச்சியில் பயன்பாட்டுக்கு வந்தது புதிய மீன் மற்றும் இறைச்சி வளாகம் – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் கீழரண் சாலை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி வணிக வளாகத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் எம். பிரதீப் குமார்,மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன், துணை மேயர் ஜி. திவ்யா தனக்கொடி, நகர பொறியாளர் பி.சிவபாதம், மண்டல தலைவர்கள் மு.மதிவாணன், ஜெய நிர்மலா புஷ்பராஜ், திருச்சி மத்தியமாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, மாமன்ற உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏரிளமானோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்