Rock Fort Times
Online News

அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்….

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சந்திப்பு வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பயணிகளுடன் சென்ற அரசு பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி பஸ்ஸின் பின்புறம் பயங்கர வேகத்தில் மோதியது. இதில், பஸ்சின் பின்பகுதி நொறுங்கியதுடன் மேம்பாலத்தின் பக்கவாட்டில் மோதி அந்தரத்தில் தொங்கியது.
இதில், மேம்பாலத்தின் அருகே சாலை ஓரத்தில் உள்ள சுவரில் அமர்ந்திருந்த 4 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், பஸ்ஸில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்