Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே காணாமல் போன மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு….

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் என்கிற அடைக்கண். இவரது மகன் தரணீஸ்வரன் (வயது 19). இவர் மணப்பாறை பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் ஐடிஐ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று கல்லூரியில் கூறிவிட்டு வெளியில் வந்த அவர் வீட்டிற்கு செல்லவில்லை. தரணீஸ்வரன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் மணப்பாறை காவல் நிலையத்தில் செல்வம் புகார் கொடுத்தார். அவரை போலீசார் ஒருபுறமும், உறவினர்கள் மறுபுறமும் தேடி வந்த நிலையில் சீகம்பட்டி அருகே விவசாய தோட்டத்து கிணற்றில் தரணீஸ்வரன் இன்று பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டா் கோபி தலைமையிலான போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாணவனின் உறவினர்களும் பதறி அடித்து ஓடி வந்தனர். பின்னர் மாணவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது முகத்தில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மாணவன் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்