தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் விஜய் முதல் முறையாக டெல்லி பயணம்…* பிரதமர் மோடியுடன் இன்று(மே 27) மாலை சந்திப்பு…!
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளாக பார்க்கப்படும் மேகதாது அணை விவகாரம், கரீப் காலத்திற்கான உர விநியோகம், மாநில மேம்பாட்டிற்கான நிதி, மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் விஜய் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (மே 27) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்கிறார். முதலில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு செல்லும் விஜய்க்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் விஜய் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்திக்கிறார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்திப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒப்புதல்கள், மேகேதாட்டு அணை விவகாரம் உட்பட தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த விரிவான மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் விஜய் வழங்கவுள்ளார். தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி குறித்தும் விஜய் பேசவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை நிறைவு செய்ததும், முதல்வர் விஜய் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.
ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி,
தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களையும் முதல்வர் விஜய் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஆகியோரை விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய்யின் முதல் டெல்லி பயணம் என்பதால் பலதரப்பிலும்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Comments are closed.