திருச்சி மேல கல்கண்டார்கோட்டை பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விவேக் குமார். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 24). இவர், தனது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர், சிவரஞ்சனி அணிந்திருந்த ஒன்றரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார். இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் அந்த நபரை விரட்டிச் சென்று பிடித்து பொன்மலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மேல கல்கண்டார்கோட்டையை சேர்ந்த சுதாகர் (45) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.