காதல் திருமணம் செய்த வாலிபர் திருச்சியில் திடீர் மரணம்…
கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது பரிதாபம்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 28). இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தூர் செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரது மகன் ராஜா (34) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
காதல் தம்பதி, தங்களது நண்பர்களுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். இந்த நிலையில் மேலூர் ரோடு பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி அனைவரும் இறங்கும் போது திடீரென்று ராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.