Rock Fort Times
Online News

வியாபாரத்தில் நஷ்டம்: மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை…!

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 40). 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வியாபாரியான இவர் தனியார் வங்கி மற்றும் மகளிர் குழு மூலம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், வாங்கிய கடனை இவரால் கட்ட முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த கோபாலகிருஷ்ணன், மதுவில் விஷத்தை கலந்து குடித்தார். இதில், மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனா் . ஆனால் சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்தார். இது குறித்து அவரது மனைவி செலின் பிரதீபா கொடுத்த புகாரின் அடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்