திருச்சி தில்லைநகர் 4-வது வளைவுரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சமீபத்தில் வீடுகளை காலி செய்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் அங்கு வந்த அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதையொட்டி அங்கு தில்லைநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.