இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது கடந்த 7 மாதங்களில் மிக அதிகமாகும். இதனால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,309 ஆக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா, மற்றும் , பீகாரில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவாவில் 47 பேருக்கும், கேரளாவில் 41 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.