Rock Fort Times
Online News

பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்த விவசாய சங்கத் தலைவருக்கு வீட்டுக்காவல்…

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சிக்கு இன்று(20-01-2024) வருகை தரும் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கேட்டார். ஆனால், போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், அவர் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என கூறியதுடன் திருச்சி தில்லைநகர் அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டில் வீட்டுக்காவலில் வைத்தனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகள் வருவாயை இருமடங்கு அதிகரிப்பதாக கூறி பதவிக்கு வந்த பிரதமர் மோடி அதன்படி செய்யவில்லை. நாட்டில் 95 கோடி விவசாயிகளின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதமர் வருகையின்போது போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்து காவல்துறையில் அனுமதி கேட்ட என்னை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனக்கூறி வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். எந்த அடக்குமுறை மேற்கொண்டாலும் அவற்றையும் மீறி பிரதமர் வரும்போது, விவசாயிகள் சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் மேற்கொள்வோம் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்