Rock Fort Times
Online News

மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி….

திருச்சி மாவட்டம் துறையூர்   காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவா் சேகர் மகன் கார்த்திக் (22). இவர் பி.காம் பட்டதாரி . படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று ( 29.09.2023 ) துறையூர் காட்டு அங்காயி கோவில் அருகே பெயிண்ட் அடிக்கும் வேலை பாா்த்துக் கொண்டிருக்கும்போது தலைக்கு மேல் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக மோதியதில் அவர் மேல் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . துறையூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி துறையூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டதாரி இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்