திருச்சி ஆர்.எம்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் பாரதி கண்ணன் (வயது59).
இவர், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் இடைத்தரகராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதே போல, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர்
சுப்பிரமணியன் (45). இந்நிலையில், கடந்த 2019 முதல் 2023-ம் ஆண்டு வரை பாரதி கண்ணன் வெளிநாடு செல்வதற்கு 24 நபர்களுக்கு விசா பெற்று தருமாறு சுப்பிரமணியனிடம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதில், ரூ. 1லட்சத்து 25 ஆயிரம் திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்தை திருப்பித் தர சுப்பிரமணியன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் பாரதி கண்ணன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.