திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான்: 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக கண் பார்வை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட் டவுன், திருச்சிராப்பள்ளி ராக் சிட்டி, ரோட்டரி கிளப் ஆஃப் ஸ்ரீரங்கம், டைமண்ட் சிட்டி, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி, திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை, நெக்ஸ்ட் ஜென், ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி ஐ டொனேஷன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி முன்னாள் மாவட்ட கவர்னர் ரமேஷ் பாபு வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார். சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு வாக்கத்தான், திருச்சி மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நிறைவு பெற்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் சுமார் 43 மில்லியன் மக்கள் கண்பார்வை இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கண் நோய் பாதிப்பால் ஏற்படும் விளைவுகள் மற்றும் நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட பயிற்சியாளர் எஸ்.ஆர்.செந்தில், கே.சீனிவாசன், மின்னல் சரவணன், ராமதாஸ், ஜோசப் விஜய் லூர்துராஜ், ஷேசாத்ரி சச்சின் பார்டியா, மேகநாதன், காஞ்சனா, ஆனந்த், ஜெகதீசன், தீபக் ஆர்தர், கௌரிசங்கர், அறிவழகன், பிரவீன் குமார், ராஜேஸ்வரன், காயத்ரி, அருண், அப்துல் ரஹீம், ஆர்த்தி, ராஜேஷ் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபா பிரபு மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.